articles

img

தோழர் பி.ஆர். நினைவு சொற்பொழிவு : ரூ.10 லட்சம் வழங்கிய ஆர்.வைகை

ம ார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய வர்களில் ஒருவர். விடுதலைப் போரா ட்டத்தில் பங்கேற்று பல்லாண்டு சிறையில் இருந்தவர். 1952ஆம் ஆண்டு சிறையில் இருந்தபடியே மது ரையில் வெற்றி பெற்றவர், ‘பி.ஆர்.’ என அன்புடன் அழைக்கப்படும் தோழர் பி. ராமமூர்த்தி. சென்னை பார்த்தசாரதி கோவிலில் அருந்ததிய மக்களுக்காக போராடியவர். பதி வாளர் அலுவலத்தில் திருமணத்தை பதிவு செய்துவிட்டு, நேராக சட்ட மன்றத்திற்கு சென்றவர். பி.ஆருக்கு திருமணம் ஆனதையே, அன்றைய முதல்வர் ராஜாஜிதான் சட்டமன்ற த்தில் அறிவித்தார். அன்று மாலை, பெரியார் தலைமையில் எளிதாக ஒரு  திருமண வரவேற்பை நடத்தினார். இப்படி அனைவராலும் பாராட்டப் படுகிற வாழ்வு வாழ்ந்தவர் தோழர்  பி.ஆர். ஆவார். கடைசி மூச்சுவரை  போராடியவர். அத்தகைய போராட்ட வாழ்வின் அடையாளமாக அவரது சிலையை வைத்துள்ளோம்.

கம்யூனிச இயக்கத்தின்  ஆணி வேராகத் திகழ்ந்தவர் ‘சிந்தனை சிற்பி’ சிங்காரவேலர் என்றால், கம்யூ னிஸ்ட் கட்சி வரலாற்றில் நீண்டகா லம் செயலாளராக இருந்தவர் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன். கம்யூனிச இயக்கத்தை உருவாக்கிய அந்த தலைவர்களின்  பெயர்கள் அரங்கங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.

நமது முன்னோடிகளின் பிறந்த நாள் விழாக்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும். ஆண்டுதோறும் தலைவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படும். டிசம்பர் 15 - தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு நாள். அன்றைய தினம் மாநிலம் முழுவதும் நிகழ்வுகளை நடத்தி, அவரது வரலாறு, இந்தியாவில் கம்யூனிச இயக்கம் கடந்த வந்த பாதையை இளம் தலைமுறைக்கு கற்பிப்போம்.

ஆண்டுதோறும் தோழர் பி.ஆர். நினைவு நாளன்று, ‘நினைவுச் சொற் பொழிவு’ நடத்த வேண்டும் என்று அவரது புதல்விகளான பொன்னி, ஆர். வைகை கேட்டுக் கொண்டனர். அதற்காக 10 லட்சம் ரூபாயை வைப்பு நிதியாக கொடுத்துள்ளனர். அதேபோன்று, தில்லியில் உள்ள சிஐடியு தலைமை அலுவலகமான பி. ராமமூர்த்தி பவனில், ஆய்வு மையம் அமைக்கவும் 10 லட்சம் ரூபாய் வழங்க உள்ளனர்.

மக்களுக்காக போராட  யார் இருக்கிறார்கள்?

மார்க்சிஸ்டுகள் இல்லை யென்றால் மக்களுக்காக போராட யார் இருக்கிறார்கள்? வாச்சாத்தி, கம்மாபுரம் காவல்நிலையம், அண்ணாமலை நகர் காவல் நிலைய வழக்குகளில் வெற்றி பெற்றது மார்க்சிஸ்டுகளின் மகத் தான சாதனை. தமிழகத்தில் மனித உரிமைகள் எங்கு பாதிக்கப்பட்டா லும், உடனடியாக களம் இறங்கும் அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்களைக் கொண்டது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி. சாதிய ஒடுக்கமுறை மற்றும் பெண்கள், குழந்தைகள் மீதான கொடுமைகள் புரையோடிப் போயுள்ள சமூகத்தில், அதற்கு காரணமாக உள்ள ஆளும் வர்க்கங்களின் அதிகார வேட்கை யை, லாப வெறியை தவிடுபொடி ஆக்குகிற இயக்கம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி. போராட்டங் களுக்கு மக்களைத் திரட்டுவ தோடு, மாற்று அரசியலை நோக்கி,  மார்க்சிய சித்தாந்தத்தை நோக்கி அவர்களை ஈர்க்க வேண்டும். வலு வான சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை பலப்படுத்துவோம்; புதிய வரலாறு படைப்போம்